முல்லைத்தீவில் காடழிப்புக்கு எதிரான போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் காடழிப்புக்கெதிரான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவில் மூன்று கோரிக்கைகளுடன் கவனயீர்ப்பு போராடடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி எதிர் காலத்தில் ஏற்படப்போகும் பாரிய அழிவுகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை பத்து முப்பது மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதிகளவு வனப்பிரதேசத்தை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வகையிலும் இடம்பெறும் காடழிப்புக்களை நிறுத்த கோரி முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்துக்கு முன்பாக இன்று காலை பத்து முப்பது மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இலங்கை முழுவதும் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வாருங்கள்,யானைகள் மற்றும் வனவிலங்குகளின் கொலைகள்/இறப்புக்களில் தலையீடு செய்யவும் (2021 இல் இதுவரை 65 யானைகள் இருந்துள்ளன),சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர் யுவதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தவும் பாக்யா அபேரத்னவிடம் மன்னிப்பு கோரவும் மற்றும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்யவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காடழிப்பால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான சித்திரங்கள் வரையப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர் யுவதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்து,வனப்பகுதிகள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவாருங்கள், நீங்கள் இல்லையென்றால் யார் -இப்போது இல்லையென்றால் எப்போது ,வன அழிப்பை தடுப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராடடத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்