இலங்கை அரசாங்கத்தின் போர்வெற்றி தினம் இன்று கொண்டாடப்படவுள்ளது.
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் கொரோனா பரவலை காரணம் காட்டி, இராணுவம், பொலிசாரால் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான நினைவுச்சின்னம் அமைந்திருந்த பகுதியில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இதில் கலந்து கொள்கிறார்.




