வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் கியூஆர் குறியீடு அறிமுகம்!

Date:

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, ஜெனரேட்டர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“எரிபொருள் நிலையங்களில் கியூஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான நடைமுறையை நாங்கள் தெளிவாக விளக்குவோம்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கை கியூஆர் முறை மூலம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்