மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (20) காலை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்தப் பிரச்சினை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி விடயங்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8,625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது.

கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை...

மட்டக்களப்பு பொதுநூலகம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்