குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Date:

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு விவசாயிகளை நேற்று திங்கட்கிழமை (25) சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு ஓப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஜடி யினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன் போது அந்த பகுதியில் ஒளித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்த இருவரையும் சி.ஜ.டி யினர் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்