பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கலந்துகொண்டார்.
பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சார்ஜன்ட் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக போலீசார் தெரிவித்தனர்.




