சுதந்திரக்கட்சியிலிருந்து தாவி விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சாந்த பண்டாரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தில் இணைவதற்கு எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என அப்பகுதி மக்கள் அரச அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




