எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் சுருண்டு விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநரே மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதேவேளை, இன்று (10) காலை 7.00 மணியளவில் நீர்கொழும்பு-தங்கொடுவ வீதியில் உள்ள தம்பரவில எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த நபர் ஒருவர் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.




