திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்த 21 வயது யுவதி குத்திக் கொலை!

Date:

மெதிரிகிரிய, அம்பகஸ்வெவ பகுதியில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (10) காலை இந்தச் சம்பவம் நடந்தது.

கொலையாளியை மீகஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆடைத் தொழழிற்சாலையில் பணியாற்றும், 21 வயதான கே.ஜி.மதுஷிகா குமாரி ரத்நாயக்க என்பவரே கொல்லப்பட்டார்.

யுவதியும், கொலையாளியும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாதவர்கள் எனவும், சுமார் 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுமார் 8 மாதங்களாக கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் வீடு திரும்பாததால், வீட்டுக்கு வர வேண்டாம் என யுவதி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று யுவதியை கொலை செய்துள்ளார்.

மீகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், , அடம்ப ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய சந்தேக நபர், ஹிங்குராங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்