யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.
மல சல கூடங்கள் நாளாந்தம் சுத்தம் செய்யப்படாமல் துர் நாற்றம் வீசுவதுடன் சந்தையின் நீர் பெறும் இடங்களும் சேறும் சகதியாகவும் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகின்றது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நிர்வாகத்திற்குட்பட்டது நெல்லியடி பொதுச்சந்தை. தற்போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆளுகையின் கீழ் இந்த பிரதேசசபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.




