நேற்று (21) சனிக்கிழமையன்று நாட்டில் 183 கோவிட் -19 மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.நாட்டில் பதிவாக கோவிட்-19 தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் முதன்முறையாக நாளொன்றில் 4,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று 4,282 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று, 18,769 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 342,159 ஆக உயர்ந்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, நாளை (23) முதல் ‘தடுப்பூசி வாரம்’ என்று அரசு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை கப்பல் சக்தி இன்று இந்தியாவிலிருந்து 90 தொன் ஒட்சிசனை எடுத்துக்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது.
செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற தவறியதற்காக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 452 பேரை இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது.




