நேற்று (11) நாட்டில் 283 தொற்ளார்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,131 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 175 பேர் மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தும் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணி 90,017 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 58 நபர்களும் நேற்று COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 2,902 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 175 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 91,631 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 266 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.