தென்மராட்சியில் கொடூரம்: கொள்ளையர்களால் வயோதிபத்தம்பதி சித்திரவதை; கணவர் கொலை!

Date:

தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வாழும் வீடொன்றிற்குள் நுழைந்துள்ளது.

முதிய தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

முதியவரின் கழுத்தை நெரித்து சித்திரவதை செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவராசா (70) என்பவரே உயிரிழந்தார்.

அந்த வீட்டில் தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டிருந்ததால் எச்சரிக்கையடைந்த அயல்வீட்டு இளைஞர்கள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு சென்ற போது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.

கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்கப்பட்டார். கணவர் உயிரிழந்திருந்தார்.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


தமிழ் பக்க செய்திகளை ஜேவிபி, நியூலங்கா, தீவகம் உள்ளிட்ட ஏராளம் இணையங்கள் மீள் பிரசுரம் செய்கின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்க செய்திகளை பாருங்கள்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்