தாம் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக வாக்குகளைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, மக்களின் உரிமைகளுக்கு பதிலாக வாக்குகளால் கட்டியெழுப்பப்படும் அரசியல் கலாசாரத்திற்கு எதிர்காலம் இல்லை என தெரிவித்தார்.



