வேலைவாய்ப்பு போர்வையில் வெளிநாட்டு அழகியை அழைத்து பாலியல் வலையமைப்பு: வெள்ளவத்தைவாசி சிக்கினார்!

Date:

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பயன்படுத்தி பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்திய குற்றச்சாட்டில் வெலள்ளவத்தையை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நபர் வேலைவாய்ப்பு வழங்கும் போர்வையில் 36 வயதான உஸ்பெகிஸ்தான் பெண்ணை அழைத்து, அவரை பயன்படுத்தி பாலியல் வலையமைப்பை இயக்கியுள்ளார்.

இது தொடர்பாக IOM அமைப்பு சிஐடியிடம் புகார் அளித்திருந்தது.அதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையில், சந்தேக நபரின் உஸ்பெகிஸ்தான் நாட்டவரான மனைவி, இதேபோன்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்