வெயாங்கொடவில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் பெண்களுக்காக இயக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மையத்தில் இருந்த ஏனைய பெண்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதைக் கண்ட அந்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து மையத்தின் அதிகாரிகள் வெயாங்கொட போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவரது கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடித்த பின்னர் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 2019 பெப்ரவரி மாதம் போலி பெயர் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் இன்று அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
அரசாங்க தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட மற்ற பெண்கள் குறித்த தகவல்களை சந்தேக நபர் ஏன் சேகரித்தார் என்பதை அறிய வெயாங்கொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




