இலங்கையில் இன்று 1,548 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 273,031 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கண்டறியப்பட்டவர்களில் 1,515 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 33 நபர்களும் இன்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது நாடு முழுவதும் 26,758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று COVID-19 இலிருந்து மீண்ட 1,804 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 242,839 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 934 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இன்று 33 கோரோனா மரணங்கள் பதிவாகின. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்தது.



