சு.க- கோட்டா சந்திப்பு!

Date:

இலங்கை சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பொதுஜன பெரமுனவிற்குள் மோதல்கள் உச்சமடைந்துள்ளன. அரசாங்கம் தன்மை கணக்கிலெடுப்பதில்லையென சு.க கடும் அதிருப்தியில் உள்ளது.

தமது உள்ளூராட்சி பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், அரசாங்க விவகாரங்களில் தொகுதி அமைப்பாளர்களை கணக்கிலெடுப்பதில்லையென்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம், கடந்த வியாழக்கிழமை இரவு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தை விட்டு சு.க வெளியேற வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்திருந்தனர். இருப்பினும், இதுபோன்ற ஒரு முடிவை இந்த நேரத்தில் எடுக்கக்கூடாது என்று மத்திய குழுவின் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதியை சந்திக்க சு.க முடிவு செய்துள்ளது. 21ஆம் திகதி சந்திப்பிற்கு வருமாறு ஜனாதிபதி தரபபிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்