சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு: இருவர் மாயம்!

Date:

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொழும்பு, கண்டி, நுவரெலியா, காலி, இரத்னபுரி மற்றும் கிளிநொச்சி ஆகிய ஆறு மாவட்டங்கள் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

1,403 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5,777 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான சம்பவங்கள் காரணமாக 142 வீடுகளும் சேதமடைந்துள்ளன. களனி, களு, ஜின் மற்றும் நில்வள கங்கைககளில் சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

எட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளும் நாளை அதிகாலை 1.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேற்கு, மத்திய, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவில் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வட-மத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம் சில நேரங்களில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்