நாட்டில் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது.
நாளொன்றில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
அதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களம் 29 பேரின் மரண விபரங்களை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பருத்தித்துறையை சேர்ந்த 48 வயதான பெண்ணும் அடங்குகிறார். 13ஆம் திகதி அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.





