தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருவதாக இன்று தெரிவித்தார்.
“நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்,” என்று அவர் சபையில் கூறினார்.
“என்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு நீதித்துறையிடம் கோரி ஓசல ஹெரத் தாக்கல் செய்துள்ள வழக்கானது, சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்னர், மக்கள் பிரதிநிதியாக பொறுப்புணர்வுடன் செயற்படாமல், தன் மீதான கவனக்குவிப்பில் மட்டுமே அக்கறையாக இருந்தார் என்ற விமர்சனங்களின் மத்தியில், இப்படி தெரிவித்துள்ளார்.




