வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு வயதுப் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து, கண்களைப் பிடுங்கிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 03ஆம் திகதிகொலை செய்யப்பட்ட பெண், கனகசபை மீகா என்ற இளம் பெண் என்றும், அவர் சில நாட்களுக்கு முன்பு பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து அங்கு தங்கியிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர், உடுப்புசெல்லாவ, செயின்ட் வத்தவைச் சேர்ந்த 25 வயது நபர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், பொலிசார் விசாரணையின் போது, 2020-ஆம் ஆண்டில் அவிசாவெல்லவில் ஒரு குறும்புச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த சந்தேக நபருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றும், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் கூறுகின்றனர். இறந்த பெண், சந்தேக நபருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
சந்தேக நபர் நீண்ட காலமாக அவர் மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அவர் வீட்டில் இருந்தபோது குளியலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைக் குத்தி, கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
வத்தளை மேலதிக நீதிபதி மெரில் போதேஜு கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு முதற்கட்ட நீதிபதி விசாரணையை நடத்தினார்.
இதற்கிடையில், அப்பெண்ணின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயது இளைஞரின் உடல் நேற்று முன்தினம் (04) அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.




