கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
17.85 மில்லியன் ரூபா பணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு பிரதான அரசியல் முகாம்களும் ஒருவர் மாறி ஒருவரின் ஊழல்களை மூடி மறைக்கும் அரசியல் முறைமையை மாற்ற விரும்பிய பொதுமக்கள் கடந்த ஆண்டு பெரும் போராட்டங்களில் ஈடுபட்ட போது இந்த பணம் மீட்கப்பட்டது.




