அவுஸ்திரேலியாவில் காணாமற்போன எட்டு வயது சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் சடலம் கான்பராவின் வடக்கே குளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குங்காலினில் உள்ள யெராபி குளத்தில் ப்ரணவின் தாய், சகோதரனின் சடலங்கள் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பிரணவ் தொடர்பாக கவலைகள் எழுந்தன. அவரது புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு, தேடுதலை முடுக்கி விட்டிருந்தனர்.
இந்த நிலையில், யெராபி குளத்திலிருந்து பிரணவ்வின் சடலமும் மீட்கப்பட்டது.
மூன்று பேரின் மரணமும் தொடர்புடையவை என்றும், வெளியாரை சந்தேகிக்கவில்லையென்றும் பொலிசார் தெரிவித்தனர்.



