யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார்.
இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு சென்ற அர்ச்சுனா, அந்த படத்தை அகற்றி, தனது காரில் எடுத்துச்சென்றார்.
நேற்று தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அதிகாரிகளுடன் சித்தசுவாதீனமற்றவர்களை போல அர்ச்சுன நடந்து கொண்டிருந்தார். இதன் எதிரொலியாக இந்த செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.




