ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

Date:

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அன்சார் முஹம்மட் சினான் பெற்றுக்கொண்டுள்ளார்.

சாரணர் இயக்கத்தில் சிறப்பான ஈடுபாடு, தலைமைத்துவத் திறன், சமூக சேவை மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்சார் முஹம்மட் சினான், USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளராகவும், YMMA சாய்ந்தமருது கிளையின் இளைஞர் விருது மற்றும் பயிற்சிப் பிரிவுத் தலைவராகவும் சமூக மற்றும் இளைஞர் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சாய்ந்தமருதிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் சாரணரின் இச்சாதனைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்