தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

Date:

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21 ஆம் திகதி வரை மட்டுமே பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள், பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தினமும் ஏராளமானோர் அவற்றைப் பார்வையிட மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருகின்றனர்.

எனினும், சிங்கக் குட்டிகள் வேகமாக வளர்ந்து வருவதால் அவற்றை பொதுமக்கள் பார்வைக்காக வெளியே கொண்டு வருவது சிரமமாகவும் பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானதாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூன் 21 ஆம் திகதிக்குப் பின்னர் அவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட மாட்டாது.

இதற்கிடையில், சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டுவதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவிலான பெயர் பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் பெயர்கள் தேஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெயர் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிகாரப்பூர்வ பெயரிடும் நிகழ்வில் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

சிங்கக் குட்டிகளை பார்வையிட விரும்புவோர் ஜூன் 21 க்குள் வருமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தற்போது அவை தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்