திருமண மண்டபத்தில் மோதல்

Date:

கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின்போது மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

எனினும், கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிலர் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸார்மீது தாக்குதல் நடத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு: மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்

திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும்...

அமெரிக்க கடற்படை முற்றுகை தளர்ந்தது: ஈரானின் எண்ணெய் வர்த்தகம் ஆரம்பம்!

ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்ற முதல் எண்ணெய்க் கப்பல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியில்...

இலங்கை பாடசாலை மாணவர்களில் 12% பேர் அதிக உடற்பருமனானவர்கள்!

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்