இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 604 பில்லியன் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு 185 பில்லியன் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மணிநேர கூடுதல் கடமை கொடுப்பனவு விகிதம் 50% குறைக்கப்பட்டு, விடுமுறை கொடுப்பனவுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களினால், மருத்துவ நிபுணர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர். இந்த பிரச்சினையைத் தீர்க்க தவறினால், தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தச் சிக்கலை அரசாங்கம் விரைந்து தீர்க்கவேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.




