பேருந்தில் பயணப்பையிலிருந்து 123 தோட்டக்கள் மீட்பு

Date:

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்ட பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டக்கள் சிறிய இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்று (22) பிற்பகல் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இச் சோதனையின்போது, 123 செயற்படக்கூடிய தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தோட்டக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 ரக தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் அடையாளம் காணப்பட்டன.

சந்தேகத்திற்குரிய எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பண்டாரவளை காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்