கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றத்தின் போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளன.
அண்மையில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. சில பொறுப்பதிகாரிகளுக்கு, இடமாற்றத்தின் போது பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்கும் இடமாற்றத்தின் போது பொறுப்பதிகாரி பதவி வழங்கப்படவில்லை.
தமது பிரதேசத்தில் சிறப்பாக கடமையாற்றிய பொலிஸ பொறுப்பதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இதனை பார்ப்பதாக பிரதேச பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



