கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

Date:

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

அனுமதி கிடைத்ததும், போட்டிப் பரீட்சை மூலம் வேலையில்லா பட்டதாரிகளை தேர்வு செய்து இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (13) மட்டக்களப்பு பழைய கச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து, அரசு நியமனம் கோரிய மகஜரை ஜனாதிபதியிடம் வழங்குமாறு அவரிடம் கையளித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை, நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு முன்பு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பகுதி பகுதியாக, அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். உங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்போம்” என கூறினார்.

இதன் மூலம், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் விரைவில் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்