CERI நிறுவனத்தின் மாற்று பராமரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (Positive Parenting) நேரிய பெற்றோரியம் தொடர்பான TOT (Training of Trainers) பயிற்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இன்று (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வானது CERI நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷாயினி மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் வளவாளராக பிரியா கிங்ஸ்லி கலந்து கொண்டு பயிற்சியை வழங்கினார்.
பயிற்சியில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிற உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.





