அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

Date:

அனர்த்தங்களால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல்களில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 1 மில்லியன் வரை அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இந்த தீர்மானம் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்டது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகளை வழங்க வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தயாராக உள்ளன. இதேவேளை, மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புகள் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் உணவுக்காக தினசரி ஒருவருக்கு ரூ. 1,800 முதல் குடும்ப அளவைப் பொறுத்து நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்