அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

Date:

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகாரிகள் புடைசூழ பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

இந்த விருந்து விழா வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு அதிகாரியை நோக்கி தனியொரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு கருதி ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக அந்த விருந்து விழாவில் இருந்து வெளியேற செய்து, அழைத்து சென்றனர்.

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களுக்கான ஆண்டு விருந்து நடைபெற்றது. இதில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது ஆயுதங்களுடன் வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு கட்டமைப்பை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போதுதான் தன் வசம் இருந்த ஷொட்-கன் துப்பாக்கியால் பாதுகாப்பு பணியில் இருந்து உத்தியோகத்தர் மீது சுட்டுள்ளார். அந்த சப்தம் கேட்டு விருந்து கூடத்தில் இருந்தவர்கள் மேசைக்கு கீழே தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புடைசூழ அந்த விருந்தில் பங்கேற்ற ட்ரம்ப் வெளியேறினார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலைமையை சீராக்கும் வகையில் களத்தில் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பணி அற்புதமானது. துணை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆயுதங்களுடன் ஒரு நபர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்த பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் ஒரு உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவரது கவச உடை தாக்குதலில் இருந்து அவரை காத்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது விசாரணையில் தான் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியது 31 வயதான கோல் தோமஸ் ஆலன் என தெரியவந்துள்ளது. அவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. அவரது புகைப்படமும் இப்போது வெளியாகி உள்ளது. தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சியை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2024-ல் ட்ரம்ப்பை கொல்வதற்கான முயற்சி இரண்டு முறை நடைபெற்றது. இதில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தாக்குதலில் அவர் காயமடைந்தார். தற்போது தாக்குதல் நடந்த ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த 1981-ல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் காயமடைந்தார்.

சந்தேக நபரான கோல் தோமஸ் ஆலனின் துப்பாக்கிகள் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டதாக மூத்த சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆலனைக் காவலில் எடுத்தபோது அவரிடம் துப்பாக்கியும் கைத்துப்பாக்கியும் இருந்ததாக அதிகாரிகள் பகிரங்கமாகக் கூறினர்.

ஆலன் ஓகஸ்ட் 2025 இல் மேவரிக் 12-கேஜ் துப்பாக்கியை வாங்கியதாகவும், ஒக்டோபர் 2023 இல் ஆர்ம்ஸ்கோர் துல்லியமான .38 அரை தானியங்கி துப்பாக்கியை வாங்கியதாகவும் பதிவுகள் காட்டுகின்றன.

நேற்று இரவு அலெனிடம் இருந்து அந்த இரண்டு ஆயுதங்களும் மீட்கப்பட்டன. அவரிடம் பல கத்திகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளை மாளிகை நிருபர்களின் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று பதில் அட்டர்னி ஜெனரல் டோட் பிளான்ச் தெரிவித்துள்ளார். Blanche NBC நியூஸின் “Meet the Pres” க்கு அவர் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்ததாக ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் இன்னும் ஒரு உள்நோக்கத்தை ஆராய்ந்து வருகிறோம், அது குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் எடுக்கும்,” என்று அவர் கூறினார். “இந்த தாக்குதலில் அவர் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று நாங்கள் நம்புகிறோம்”

அந்த அதிகாரிகள் “அநேகமாக” ஜனாதிபதியை உள்ளடக்கியிருக்கலாம் என பிளான்ச் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...

ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதராசா!

ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்