26.5 C
Jaffna
March 1, 2025
Pagetamil
கிழக்கு

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு காரணமாக இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு, தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், ஆறுகள் மற்றும் குளங்களில் நீரின் போக்கை கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், எச்சரிக்கைகளை பின்பற்றி தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!