இன்றைய வானிலை அறிக்கை

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சில பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய அனர்த்தங்கள் உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் என்ற அடிப்படையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணம், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் மேல் கனமழை ஏற்படும் எனவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் உயர்வு போன்ற அனர்த்தங்களைத் தடுக்க அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்