மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Date:

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள்.

கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களின் முன்னர், மன்னார், உயிலங்குளத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளின் வரிசையில் இந்த சம்பவமும் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்காக வந்தவர்களே துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டனர்.

வெளிநாட்டில் உள்ள ஒருவரே கூலிப்படையினர் மூலம் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். அந்த நபரை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கூலிப்படையாக செயற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகத்தில் இருவரை நேற்று முன்தினமே பொலிசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார், நடுக்குடாவில் வைத்து ஒருவரும், கொழும்பில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்