உப்புவெளியில் போக்குவரத்து தடை

Date:

திருகோணமலை உப்புவெளி பேரூந்து நிலையத்திற்கு அருகில், உப்புவெளி பொலிஸ் நிலையத்தை கடக்கும் வீதியில் பாரிய மரம் ஒன்று அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது.

தற்சமயம் நடைபெற்ற சம்பவமாகையால் குறித்த பாதை முற்றாக மறிக்கப்பட்டு போக்குவரத்துக்கு முழுமையான தடை ஏற்பட்டுள்ளது.

அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றப் பணியாளர்கள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்காக சில மணி நேரங்கள் ஆகலாம் எனவும் அதற்குள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அசௌகரியம் தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவ்வாறான வானிலை காரணமாக பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில்...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்