யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியதாக கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு ரூ. 25,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.




