பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் வெள்ளிக்கிழமை (24) அன்று மீட்டனர்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் எவரும் இன்றி ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக அந்த ஆயுதம் வெலிகந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரி-56 ரக துப்பாக்கி ஒரு கருப்பு பொலித்தீன் பையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெலிகந்த பொலிஸ் கூறுகிறது.
விசாரணைகளை நடத்தி வரும் வெலிகந்த பொலிஸ், ரி-56 ரக துப்பாக்கியின் வரிசை எண் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ஜனவரி 12 அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு இது சொந்தமானது என வெலிகந்த பொலிஸ் சந்தேகிக்கிறது.




