உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

உணவு விஷமாகியதால் டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலையின் 13 மாணவர்கள் நேற்றைய தினம் (10) டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாணவர்கள் 4 மற்றும் 5 ம் வகுப்புகளில் கல்வி பயிலும் 9 முதல் 10 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடசாலை, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனமாகும்.

மாணவர்கள், பாடசாலையில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் வீடு திரும்பியதும் தலைச்சுற்று மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக பெற்றோர்களால் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

வைத்தியர்கள் தெரிவித்ததின்படி, இவர்கள் அனைவரின் நிலையும் தற்போது கவலைக்கிடமாக இல்லாத நிலைமைக்கு வந்துள்ளதாகவும், தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்