உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

Date:

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு இதே அளவு வரி அறவீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, நாட்டில் சுமார் 1 லட்சம் மில்லியன் கிலோ தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது விவசாயிகளின் பொருளாதாரத்தை அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் உரிய முறையில் வரியளிக்கப்படாததால், இது அரசு வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

அதோடு, முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளும் உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கும் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்படாமல் பேச்சுக்களாகவே மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து அரசின் நிலைப்பாடு மற்றும் தீர்வுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்