பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிக்குள் உயிரை மாய்த்த இளம் வைத்தியர்: காதல் விவகாரம் காரணமா?

Date:

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இன்று (12) இந்த சம்பவம் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் பிரேம்குமார் கிரிசாந் (30) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

கொழும்பை சேர்ந்த இவர், காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்துள்ளார் என கருதப்படுகிறது. அவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையெடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர்,  வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக காணப்பட்டார்.

அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்