முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2024 கிளிநொச்சியில்
சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள்
பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச்
சுடரேற்றப்பட்டு, தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும்
செலுத்தப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அனைத்து மக்களையும்
நினைவு கூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால்
கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.




