மீரியபெத்த பழைய சரிவு பகுதியிலிருந்து மக்களை வெளியேற உத்தரவு

Date:

கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி அதன் முன்னேற்றத்தை வியாழக்கிழமை (19) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி சில்வா, புதன்கிழமை (18) உத்தரவிட்டார்.

வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற மறுத்த பதினாறு குடும்பங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

கொஸ்லந்த பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்களை பரிசீலித்த பதில் நீதவான் கென்னத் டி சில்வா, பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் 16 குடும்பங்களை உடனடியாக அகற்றி, நாளை நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு செல்லாவிட்டால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்