பெண் ஒருவர் குளியலறையில் குளிப்பதை இரகசியமாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அம்பாறையில் உள்ள வீடொன்றில் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் அத்துமீறி நுழைந்து அந்த வீட்டில் வசித்த பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது வீடியோ எடுத்துள்ளார்.
குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



