2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிற சர்வதேச ஃபிரான்சைஸ் லீக்குகளில் தான் பங்கேற்பதற்கு ஏதுவாக, இலங்கை கிரிக்கெட் சபை தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்குமாறு உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார திரும்பப் பெற்றுள்ளார்.
புதன்கிழமை (23) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாகவும், மனுதாரர் இந்த விண்ணப்பத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வாதத்தைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், பின்னர் அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.



