பொலிசாரிடம் சிக்கிய இளைஞனின் கைபேசிக்கு போதைப்பொருள் கேட்டு வந்த 50 அழைப்புக்கள்!

Date:

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்கு,  ஐஸ் போதைப்பொருள் தருமாறு கேட்டு சுமார் 50 பேர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்த அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தெரியாமல் போதைப்பொருள் கேட்டு அழைப்புகளை விடுத்ததாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஐஸ் போதைப்பொருளை கேட்டதாக கூறப்படும் நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, 19 வயதுடைய இளைஞன் ஒருவரைக் கைதுசெய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த 23 வயதுடைய இளைஞரும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்