27.4 C
Jaffna
February 13, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையை விட்டு விலகிச் செல்லும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

நாட்டின் மேற்குப் பகுதியூடாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக இலங்கைக் கடற்கரையிலிருந்து நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நாட்டை விட்டு நகர்வதால், வானிலையில் அதன் தாக்கம் இன்று மாலை முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பின்படி, நாளை செவ்வாய்க்கிழமை (27) வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லசந்த் வழக்கில் திடீர் திருப்பம்

east tamil

மியான்மர் இணைய மோசடி நிலையங்களில் இருந்து 260 பேர் மீட்பு

east tamil

குரங்குகளை தீவுக்கு மாற்றும் அரச திட்டம்

east tamil

கத்தியை காட்டி மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்

Pagetamil

பிரபல ரவுடி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!